கல்குடா முஸ்லிம்கள் ஓர் பூர்வீக வரலாற்றுக் குறிப்பு-அ~;n~ய்க். அஹமது லெவ்வை ஜூனைதீன் (நளீமி-BA)
February 5, 2010 at 10:05 am · Public Articles
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் வரலாற்றை ஆராய்கின்ற போது இலங்கைக்கு அராபியர் குடியேறிய காலப்பகுதியிலேயே இங்கு முஸ்லிம்கள் குடியேறி இருக்க முடியும் எனப்பல வரலாற்று ஆய்வு நூல்களும் இப்னுபதூதா, முஸாதி (303A.H), சுலைமான் (225A.D-839 AD)1 போன்ற பலரது பயணக்குறிப்புகளும் குறித்து நிற்கின்றன. மட்டக்களப்பு எனும் போது தற்போது குறிப்பிடுகின்ற அம்பாறை மட்டக்களப்பு உட்பட பொலன்னறுவை மாவட்டத்தில் ஒரு பகுதியையும் சேர்த்தே முன்பு குறிப்பிடப்பட்டது.
இலங்கையின் புராதன காலந்தொட்டு மட்டக்களப்பு; பிரதான துறைமுக நகர்களில் ஒன்றாகவே இருந்து வந்துள்ளமையை வரலாற்றில் காணக்கிடைக்கின்றது. புகழ் மிக்க அராபிய புவியியலாளர்களான அல் பூர்பானி, அபூசெய்யித் போன்றோர் 12ம் நூற்றாண்டில் வரைந்த வரைபடத்தில் இலங்கையின் கிழக்குத் துறைமுகங்களை குறித்துக்காட்டியுள்ளதுடன், மட்டக்களப்பு துறைமுகத்தையும் உள்ளடக்கியுள்ளனர். 2
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதானத்திற்கு முக்கிய வழி கோழிய அம்சங்களில் கல்குடாத் துறைமுக நகரும் ஒன்றாகும் என்பதனை சகவீரன் என்பவர் ‘கண்ணகிவலக்குரை’ என்ற காவியத்திலே துரியோட்டு என்ற பிரிவில்
“பன்றித்தீவு சல்லித்தீவு, பாலமுனை பாசிக்குடா
என்றெற்காலமும் வழங்கும் ஏறாவூர் தனைக்கடந்து
சென்றப்போ புளியந்துறை சேறப்புறக்கிட்டோடி
மன்றலொத்த தொடைமாநபர் மட்டக்களப்பில் விட்டார்”
என்று குறிப்பிடுகின்றார். 15ஆம் 16ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகவீரர் அறிந்து கொள்ளும் அளவிற்கு; அன்று பாசிக்குடா சிறந்து விளங்கியதே காரணம் எனக் கொள்ளலாம். எபக்ஸி நடராசா தனது மட்டக்களப்பு மான்மியம் என்ற தொகுப்பில் பாசிக்குடாவிலிருந்து ஏழு துறைதான்டி கொட்டியாரம் சென்றதாகக் குறிப்பிடுகின்றார். அவ்வாறே மட்டுநகர் முகத்துவாரம் கல்குடா ஆகிய இரு துறைகளிலும் பருவப்பெயர்ச்சிக் காற்றின் தாக்கத்தால் ஆறாறு மாதம் மாறி மாறிக்கப்பல்கள் கரைதட்டின என ஆசிரியர் திலகம் எஸ்.பிரான்சிஸ் கூறுகின்றார்.3 (continue..)
1.காத்தான்குடி முஸ்லீம்கள் வரலாற்றுத் தொகுப்பு
