மரமுந்திரிகை தொழிலை மீண்டும் செய்ய நடவடிக்கை
August 26, 2010 at 2:10 pm · Posted Public Articles · வணிகம்
யுத்தம் கரணமாகக் கைவிடப்பட்டிருந்த மரமுந்திரிகை கைத்தொழிலை வட பகுதியில் மீண்டும் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாயக் கைத்தொழில் மற்றும் இயற்கை வள பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன தெரிவித்துள்ளார்.
வடபகுதியில் அதிக இடங்களில் மரமுந்திரிகைச் செய்கை கைவிடப் பட்டுள்ளதாகவும் மாந்தை என்ற இடத்தில் 600 ஏக்கரிலும் ஜயபுரம் என்ற இடத்தில் 1000 ஏக்கரிலும் மீள் நடுகை செய்யவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாட்டின் மொத்த மரமுந்திரிகை உற்பத்தியில் 70 சதவீதம் அன்று வடபகுதியிலிருந்தே மேற்கௌளப் பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
